கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுகாதாரத் துறையில் ஊழல்கள் மலிந்துள்ளன: சஞ்சய் ரெளத்

மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையில் ஊழல் மலிந்துள்ளதாக சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
சஞ்சய் ரெளத் | கோப்புப் படம்
Updated On :6 டிசம்பர் 2023, 12:17 pm

DIN

மும்பை: சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத், புதன்கிழமை மகாராஷ்டிர மாநில முதல்வருக்கு அம்மாநிலத்தில் நடக்கும் சுகாதாரத் துறை ஊழல்கள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்,

தனியார் மருத்துவமனைகள், அரசின் மருத்துவ காப்பீட்டின்கீழ் இடம்பெற லஞ்சம் கேட்கப்படுவது உள்பட பல புகார்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்,

இது தொடர்பாக முதல்வரின் எதிரணியைச் சேர்ந்த சுகாதார துறை அமைச்சர் தானாஜி சாவந்த் நாளை (வியாழக்கிழமை) விளக்கமளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் அரசின் மருத்துவ காப்பீட்டின்கீழ் தங்களை இணைத்துக்கொள்ள படுக்கையொன்றுக்கு ரூ.1 லட்சம் கேட்கப்படுவதாகவும் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், இயக்குனர்கள் பணியமர்த்தப்பட்டுவதில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும் தேவையான தகுதிகள் சரிபார்க்கப்படுவதில்லை என்றும் சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களிடமும் லஞ்சம் வாங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.