தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

104 இந்திய யாத்ரீகர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்!

சிந்து மாகாணத்தில் உள்ள ஷதானி தர்பாருக்கு செல்வதற்கு வசதியாக இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு 104 பேர்களுக்கு விசாக்களை வழங்கியதாக பாகிஸ்தான் தூதரகம் இன்று தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :8 டிசம்பர் 2023, 4:50 pm

DIN

சிந்து மாகாணத்தில் உள்ள ஷதானி தர்பாருக்கு செல்வதற்கு வசதியாக இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு 104 பேர்களுக்கு விசாக்களை வழங்கியதாக பாகிஸ்தான் தூதரகம் இன்று தெரிவித்தது.

மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது தொடர்பான இருதரப்பு நெறிமுறையின் கீழ், இந்தியாவிலிருந்து சீக்கிய மற்றும் இந்து யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானுக்கு வருகை தருகின்றனர்.

இந்த நெறிமுறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.

அதே வேளையில் டிசம்பர் 12 முதல் 23 வரை சிந்துவின் ஷதானி தர்பார் ஹயாத் பிடாஃபியில் நடைபெறும் சிவ அவ்தாரி சத்குரு சந்த் சதாராம் சாஹிப்பின் 315வது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இந்திய இந்து யாத்ரீகர்களுக்கு 104 பேர்களுக்கு விசாக்களை வழங்கியுள்ளது என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.