திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தில்லி கலால் கொள்கை: பினோய் பாபுவுக்கு ஜாமீன்!

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மதுபான நிறுவனமான பெர்னாட் ரிக்கார்டின் நிர்வாகி பினோய் பாபுவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :8 டிசம்பர் 2023, 10:02 am

DIN

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மதுபான நிறுவனமான பெர்னாட் ரிக்கார்டின் நிர்வாகி பினோய் பாபுவுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிச.8) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்ட பினோய் பாபு 13 மாதங்களுக்கு மேலாக காவலில் இருப்பதாகவும், அவருக்கு எதிரான விசாரணை இன்னும் இந்த வழக்கில் தொடங்கவில்லை என்றும் குறிப்பிட்டது. 

பாபு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்த வழக்கில் முரண்பாடுகள் இருப்பதாகவும் பெஞ்ச் குறிப்பிட்டது. விசாரணைக்காக நீண்ட நாள் சிறைக்குள் வைத்திருக்க முடியாது. இது முறையல்ல என்றும் குறிப்பிட்டது. 

இந்த வழக்கில் சிபிஐ குற்றஞ்சாட்டுவதற்கும், அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டுவதற்கும் இடையே சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் பெஞ்ச் கூறியது.

இந்த நிலையில், விசாரணை தொடங்காமல் அமலாக்கத்துறை யாரையும் நீண்ட காலத்திற்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்று ராஜுவிடம் கூறிய நீதிபதி கண்ணா, இந்த வழக்கில் பினோய் பாபுவை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
 
பாபு மற்றும் நாயர் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.