இந்தியா- தென்கொரியா நாடுகளிடையேயான உறவு 50-வது ஆண்டைத் தொடும்வேளையில் இரு நாடுகளுக்கிடையேயான நட்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர், “இந்தியா மற்றும் கொரியக் குடியரசுடன் ராஜ்ய உறவின் 50-வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். பரஸ்பர மரியதை, வளங்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் மற்றும் கூட்டாண்மையைத் தொடரும் பயணம் இது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பிரிக்ஸ்+ ஆடை அலங்கார அணிவகுப்பு... சொல்வது என்ன?
கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு தனத் வாழ்த்துகளைப் பகிர்ந்த அவர், இரு நாடுகளின் சிறப்பான ராஜ்ய உறவை வலுப்படுத்தவும் விரிவுப்படுத்தவும், கொரிய அதிபருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.