இந்தியா- தென்கொரியா நட்புக்கு வயது 50!

இந்தியா தென்கொரியா நட்பு குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தென்கொரிய அதிபருடன் மோடி | கோப்பு (ENS)
தென்கொரிய அதிபருடன் மோடி | கோப்பு (ENS)

இந்தியா- தென்கொரியா நாடுகளிடையேயான உறவு 50-வது ஆண்டைத் தொடும்வேளையில் இரு நாடுகளுக்கிடையேயான நட்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர், “இந்தியா மற்றும் கொரியக் குடியரசுடன் ராஜ்ய உறவின் 50-வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். பரஸ்பர மரியதை, வளங்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் மற்றும் கூட்டாண்மையைத் தொடரும் பயணம் இது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு தனத் வாழ்த்துகளைப் பகிர்ந்த அவர், இரு நாடுகளின் சிறப்பான ராஜ்ய உறவை வலுப்படுத்தவும் விரிவுப்படுத்தவும், கொரிய அதிபருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com