திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

9 ஆண்டுகளில் 82% மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பு!

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 82 சதவிகித மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 டிசம்பர் 2023, 4:10 pm IST

தில்லி: இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 82 சதவிகித மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவை உறுப்பினர் எழுப்பிய மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான கேள்விக்கு பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “நாட்டில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது 82% அதிகரித்து 706 கல்லூரிகள் உள்ளன. 51,348-ஆக இருந்த எம்பிபிஎஸ் சீட்டுகள் தற்போது 1,08,940-ஆக அதிகரித்துள்ளன.

அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சீட்டுகள் 127% அதிகரித்து 70,674-ஆக உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.