மாநிலத்திற்கான நிதி நிலுவைத் தொகையை விடுவிப்பது தொடர்பாக டிசம்பர் 20-ல் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலத்திற்கான நிதி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோர உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடியுடனான இந்த சந்திப்புக்கு மம்தாவின் கோரிக்கையை பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
டிசம்பர் 20ஆம் தேதி காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.