அனைவரும் செய்யறிவை (செயற்கை நுண்ணறிவு) சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும், தீவிரவாதிகளின் கைகளில் செய்யறிவு தொழில்நுட்பம் கிடைத்தால் அது உலகுக்கு ஆபத்தானதாக அமையலாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
செய்யறிவு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: அசோக் செல்வனின் சபா நாயகன்: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
உச்சி மாநாட்டில் அவர் பேசியதாவது: செய்யறிவு தொழில்நுட்பத்தை பொறுப்பாக சரியான முறையில் பயன்படுத்த இந்தியா உறுதியாக உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் செய்யறிவு மிகப் பெரிய தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது. ஆனால், செய்யறிவில் தீமைகள் இல்லாமலும் இல்லை. செய்யறிவு தொழில்நுட்பம் தீவிரவாதிகள் கைகளில் கிடைத்தால் அது மிகப் பெரிய ஆபத்தாக அமையும் என்றார்.