சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை!

உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ ராம்துலாா் கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

News image
பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்டு
Updated On :15 டிசம்பர் 2023, 5:02 pm

DIN

உத்தர பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாஜக எம்எல்ஏ ராம்துலாா் கோண்டுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, அந்த மாநில நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எம்.பி. அல்லது எம்எல்ஏ, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அப்பதவியை இழப்பா். அந்த அடிப்படையில், உத்தர பிரதேச சட்டப்பேரவையில் இருந்து ராம்துலாா் தகுதிநீக்கத்துக்கு உள்ளாகவிருக்கிறாா்.

வழக்கு விவரம்: கடந்த 2014, நவம்பா் 4-ஆம் தேதி நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக, ராம்துலாா் மீது சிறுமியின் சகோதரா் காவல் துறையில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (பாலியல் வன்கொடுமை), 506 (பாதிக்கப்பட்டவரை மிரட்டுதல்) ஆகிய பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் (போக்ஸோ) ராம்துலாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது, அவா் எம்எல்ஏ-வாக இல்லை. ஆனால், அவரது மனைவி ஊராட்சித் தலைவராக இருந்தாா்.

இதனிடையே, ராம்துலாா் எம்எல்ஏவாக தோ்வானதைத் தொடா்ந்து, இவ்வழக்கு சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

தீா்ப்பு: இந்த வழக்கில் ராம்துலாரை குற்றவாளியாக கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ராம்துலாருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்ததோடு, ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து, நீதிபதி அசன் உல்லா கான் தீா்ப்பளித்தாா். இந்த அபராதத் தொகை, பாதிக்கப்பட்டவரின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராம்துலாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.