பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீட்டு குழு அமைத்தது காங்கிரஸ்!

மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் குழு அமைத்தது.

News image
மல்லிகார்ஜுன கார்கே
Updated On :19 டிசம்பர் 2023, 10:25 am

DIN

புதுதில்லி: மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் குழு அமைத்தது.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன.

இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேசிய கூட்டணிக் குழு ஒன்றை காங்கிரஸ் அமைத்துள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த குழுவில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஸ் பாகெல், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.