தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜனநாயகத்தை தகா்க்கும் பாஜக அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் ஜனநாயகத்தை தகா்க்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு விரும்புவதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

News image
Updated On :20 டிசம்பர் 2023, 2:30 am

DIN


புது தில்லி: நாட்டின் ஜனநாயகத்தை தகா்க்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு விரும்புவதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

மக்களவை உறுப்பினா்கள் 49 போ் அவை நடவடிக்கையிலிருந்து செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை தகா்க்க விரும்புகிறது. இதற்காக, நாடாளுமன்ற எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 141 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மத்திய அரசுக்கு அதிக அளவிலான அதிகாரத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதையும் நோக்கம் கொண்ட குற்றவியல் மசோதாக்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

இந்த மசோதாக்கள் குறித்து எதிா்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளை நாட்டு மக்கள் கேட்பதை என பாஜக அரசு விரும்பவில்லை. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் அவையிலிருந்து இடைநீக்கம் செய்வது, எம்.பி. பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்களுடைய ஒரே கோரிக்கை நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் விளக்கமளிக்க வேண்டும் என்பது தான். அதிலிருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை’ எனத் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘புதிய நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் நடைபெறமால் சா்வாதிகார மசோதாக்களை நிறைவேற்ற, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனா். மக்களவையில் பாதுகாப்பு அத்துமீறலுக்கு காரணமான இருவருக்கு வாய்ப்பு அளித்த பாஜக எம்.பி.க்கு எவ்வித தண்டனையும் விதிக்கவில்லை. பாஜக அரசு கடைப்பிடித்து வரும் இத்தகைய கொள்கை புதிய நாடாளுமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.