சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

எம்.பி.க்கள் இடைநீக்கத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்!

நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

News image
Updated On :21 டிசம்பர் 2023, 7:52 am

DIN

நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

143 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சௌக்கிற்கு பேரணியாகச் சென்றனர். 

இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் நாடாளுமன்றத்தில் சாதிவெறியைக் கொண்டு வருவதாகும். 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியது அவையின் சிறப்புரிமையை மீறிய செயல்.

இது ஏன் நடந்தது, யார் பொறுப்பு என்பது குறித்து நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்னையை எழுப்ப விரும்புகிறோம்.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பேச விரும்பின, ஆனால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் வரவில்லை, பிரதமர் மற்ற இடங்களில் தொடர்ந்து உரையாற்றிய வருவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார். 

எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி தலைவர்கள் போராட்டம் நடத்துவார்கள். மேலும் இந்த அரசாங்கத்தின் ஒழுக்கக்கேடான மற்றும் சட்டவிரோதமான நடத்தைக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.