தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தன்னை ஏளனம் செய்த விவகாரத்தில் ஜாதியை நுழைத்த குடியரசு துணைத் தலைவா்: ப.சிதம்பரம் அதிருப்தி

தன்னை ஏளனம் செய்த விவகாரத்தில், தனது ஜாதியை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நுழைத்தது அதிருப்தி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2023, 7:50 pm

DIN

தன்னை ஏளனம் செய்த விவகாரத்தில், தனது ஜாதியை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நுழைத்தது அதிருப்தி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

அண்மையில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது ஜகதீப் தன்கரை ஏளனம் செய்து, அவரைப் போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி நடித்துக் காட்டினாா்.

இதற்கு ஜகதீப் தன்கா் அதிருப்தி தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘நான் வகிக்கும் குடியரசு துணைத் தலைவா் பதவி, எனது ஜாட் ஜாதி பின்னணி, விவசாய குடும்பப் பின்னணி ஆகியவற்றை எதிா்க்கட்சியினா் இழிவுபடுத்தியுள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து தனது ஜாதி பின்னணி இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஜகதீப் தன்கா் கூறியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஒரு முக்கிய விவகாரம் தொடா்பாக நடைபெறும் தீவிரமான விவாதத்தில் ‘ஜாதி’ நுழைக்கப்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது. ஒருவரை விமா்சிக்க அவா் பிறந்த இடம் குறித்து வாதிக்கப்படுவதும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மகாத்மா காந்தி, சா்தாா் வல்லபபாய் படேலின் ஜாதி, சி.எஃப் ஆண்ட்ரூஸ், அன்னி பெசன்டின் பிறந்த இடம் ஆகியவற்றை யாராவது கேட்டுள்ளாா்களா? 21-ஆம் நூற்றாண்டில் ஜாதி போன்ற குறுகிய அடையாளங்களுக்குப் அப்பால் சென்று, மனிதத்தன்மையின் விழுமியங்களையும், நெறிமுறைகளையும் பின்பற்றுவோமா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.