புது தில்லி: 75 வயதான முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரி, உளவு அமைப்புகளில் பணியாற்றியவர், ரயில் மோதி பலியாகியுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது ஓட்டுநர் தெரிவிக்கும் தகவலின்படி, ரயில் கடப்பதற்காக தடுப்பு போடப்படிருந்தபோது காரில் இருந்து இறங்கி தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
மோகன் தாஸ் மேனன், 1974 பேட்சைச் சார்ந்த ஐபிஎஸ் அதிகாரி , இந்திய அரசின் உளவு அமைப்பான ரா மற்றும் புலனாய்வு அமைப்பு ஐபி ஆகியவற்றில் பணியாற்றியவர்.
தெற்கு தில்லியில் வசித்து வந்தவர் புதன்கிழமை ஒருவரின் இறுதி சடங்குக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளார். பிரார் ஸ்கொயர் பகுதியில் ரயில் தடுப்பு போடப்பட்டதைக் கவனித்துள்ளார்.
காரில் இருந்து இறங்கியவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அவருக்கு ரயில் வருகிற சத்தம் கேட்டிருக்காது எனச் சந்தேகப்படுகிறோம் எனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!

கரூர் பலி: மார்ச் 17-ல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்!

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

