அமிர்தசரஸ்: துபையில் இருந்து அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு 1 கிலோ தங்கம் கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரூ. 67 லட்சம் மதிப்புள்ள 1.068 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
கடத்தல் தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பயணி ஒருவரைத் தடுத்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.
மஞ்சள் உறையில் தங்கக் கட்டிகள் அடைக்கப்பட்டு, அவரது இடுப்பில் சுற்றப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
அந்தப் பயணி, தான் தங்கம் கடத்த முயன்றதையும் அதற்கு கூலியாக ரூ.10 ஆயிரம் பெற்றதாகவும் துபையில் தன்னிடம் தங்கம் அளிக்கப்பட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: கார் நிறுவனத்தின் விளம்பர தூதராக.. பிரபல பாலிவுட் நடிகை!
மேலும், விசாரணைக்கு அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.