அமிர்தசரஸ்-தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கொடியசைத்து தொடங்கி வைப்பு!
பஞ்சாப் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அமிர்தசரஸ்-தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கப்பட்டது.


அமிர்தசரஸ்: பஞ்சாப் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அமிர்தசரஸ்-தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் உடனிருந்தார்.
மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை இன்று திறந்து வைத்த மோடி, இரண்டு அம்ரித் பாரத் மற்றும் ஆறு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமிர்தசரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அவுஜ்லா கூறுகையில், இங்கிருந்து வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களுக்கு வசதியாக அமையும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...