மதுரை மீனாட்சியம்மன் ஆசிர்வாதத்துடன், நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே, முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்று, ராஜிநாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை த்ரிஷா போட்டியிடுவார் என்று கூறப்பட்டுவந்தது. ஆனால், அது பற்றி தவெக தரப்பில் எங்கும் உறுதியளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், மதுரையில் இன்று நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்த மதுரை ரசிகர்கள், சும்மா இல்லாமல் வேலு நாச்சியாரின் உடையில் த்ரிஷா இருக்கும் படம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையின் படங்களை இணைத்து முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.
சரி திடீரென ஏன் இந்த போஸ்டர் என்று கேட்டபோது வெளியான தகவல்தான் ஆச்சரியம். பிரபல நடிகையான திரிஷா அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மதுரையில் திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் நடிகை திரிஷா அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக, எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
பொதுவாக சினிமா, அரசியல் போஸ்டர்களைக் கண்டும் காணாமல் செல்லும் மக்கள், தற்போது நடிகை த்ரிஷா போஸ்டர்களை ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.
Summary
With the blessings of Madurai Meenakshi... Trisha's political posters create a stir!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம்
விஜய்யை மிஸ் பண்ணப் போறோம்! ஜன நாயகன் குறித்து த்ரிஷாவின் அம்மா!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கின் போது தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



