டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அமைதிக்கான நாளை...: கேரள முதல்வர் புத்தாண்டு வாழ்த்து!

கேரள முதல்வர் மற்றும் ஆளுநர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

News image
பினராயி விஜயன்
Updated On :31 டிசம்பர் 2023, 10:43 am

DIN

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

கேரள மாநிலம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கேரள மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஆளுநர்.

ஆளுநர், “2024-ம் ஆண்டு நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு மகிழ்வையும் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் கருத்தியல் பார்வையிலும் செயல் வழியிலும் உறுதி செய்து மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்துக்கு வழிகோலும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்,  “உலகமே புத்தாண்டை வரவேற்கும் இந்த வேளையில் நாம் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சமத்துவம் நிறைந்த நல்லதொரு நாளைத் தொடங்கும் நம்பிக்கையைப் பகிர்ந்துக் கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களைப் பிரிவினைவாத அரசியல் மூலமாக விரோத சக்திகள் பிரிக்க நினைக்கும் முயற்சிகளிலிருந்து காக்கவும் அதனை மனிதநேயத்தின் அடிப்படையில் தோற்கடிக்கவும் வேண்டும், வெறுப்பு பிரசாரத்தை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார், கேரள முதல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.