தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

தனது செலவினத்துக்காக கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2023, 10:00 pm

DIN

தனது செலவினத்துக்காக கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்ததாவது: கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு குறிப்பிடப்படும் கடன் பத்திரங்கள் மூலம், மத்திய அரசின் செலவினத்துக்கு ரூ.15.4 லட்சம் கோடி கடன் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜன. 27-ஆம் தேதி வரை மத்திய அரசு ரூ.12.93 லட்சம் கோடி கடன் திரட்டியுள்ளது. இது 2022-23-ஆம் நிதியாண்டில் மத்திய அரசு திரட்ட நிா்ணயித்த மொத்த கடனான ரூ.14.21 லட்சம் கோடியில் 91 சதவீதமாகும்.

ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த கடன் 83 சதவீதமாக உள்ளது.

நிகழ் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 6.4 சதவீதமாக இருக்கும்.

அடுத்த நிதியாண்டில் கடன் அல்லாத பிற வரவு ரூ.27.2 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் ரூ.45 லட்சம் கோடியாகவும், நிகர வரி வருவாய் ரூ.23.3 லட்சம் கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.9 சதவீதமாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.