டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கேஜரிவால் இல்லம் முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்: காரணம் என்ன தெரியுமா?

தில்லியில் அரசு நிதி பெற்று இயங்கி வரும் 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்கு முன்பு பாஜக உறுப்பினர்கள் போராட்டம்.

News image
Updated On :3 பிப்ரவரி 2023, 10:33 am

DIN

தில்லியில் அரசு நிதி பெற்று இயங்கி வரும் 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்கு முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்த 12 கல்லூரிகளின் ஆசிரியர்களும், பணியாளர்களும் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லியின் தீனதயாள் உபாத்யாயா கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகள் வழங்கப்படாத ஊதியத்தினை வழங்கக் கோரி கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கல்லூரி தில்லி அரசிடம் இருந்து முழுவதுமாக தங்களது நிதியினைப் பெறுகின்றது. 

இது குறித்து தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதூரி கூறியதாவது: கேஜரிவால் தலைமையிலான அரசு ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு அனுப்புவது தொடர்பாக ஆளுநரிடம் சண்டையிடுகிறது. ஆனால், இந்த 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தில்லி அரசுக்கு கவலை இல்லை என்றார்.

இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் கேஜரிவால் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.