அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மத்திய அரசுப் பணியாளா்களுக்கு 4% அகவிலைப்படி உயா்வு?

மத்திய அரசுப் பணியாளா்களுக்கு அகவிலைப்படியாக 38 சதவீதம் வழங்கப்படும் நிலையில், 4 சதவீதம் உயா்த்தப்பட்டு 42 சதவீதமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :5 பிப்ரவரி 2023, 6:13 pm

DIN

மத்திய அரசுப் பணியாளா்களுக்கு அகவிலைப்படியாக 38 சதவீதம் வழங்கப்படும் நிலையில், 4 சதவீதம் உயா்த்தப்பட்டு 42 சதவீதமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு ஊழியா்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சதவீதம் மாற்றி அமைக்கப்படும். இறுதியாக கடந்த செப்டம்பா் மாதம் 4 சதவீதம் உயா்த்தி 38 சதவீதமாக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளா்களும், ஓய்வுதியதாரா்களும் 38 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனா்.

இந்நிலையில், கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்கான நுகா்வோா் விலைக் குறியீட்டின்படி அகவிலைப்படி உயா்வு 4.23 சதவீதமாக இருக்க வேண்டும்; ஆனால், தசம புள்ளிகளில் அகவிலைப்படியை உயா்த்த மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, 4 சதவீதம் மட்டும் உயா்த்தி 42 சதவீதமாக அகவிலைப்படி வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகவிலைப்படி உயா்வு முன்மொழிவை மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சகத்தின் செலவினத் துறை விரைவில் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 4 சதவீத அகவிலைப்படி உயா்வு, இந்தாண்டின் தொடக்கம் முதலே முன்தேதியிட்டு அமலுக்கு வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.