நாட்டில் 100-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு! 

நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. 
2020, மார்ச் மாதத்துக்குப் பின் முதல் முறை: கரோனா பலி பதிவாகவில்லை
2020, மார்ச் மாதத்துக்குப் பின் முதல் முறை: கரோனா பலி பதிவாகவில்லை

புது தில்லி: நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

நாட்டில் புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,83,639 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இறந்தோரின் எண்ணிக்கை 5,30,746 ஆக உயர்ந்துள்ளது. 

நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,785ஆக குறைந்துள்ளது. 

தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,51,108 ஆகப் பதிவாகியுள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220,60 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com