25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

2022-இல் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 86,713 ஆக அதிகரித்துள்ளது: மத்திய அரசு

2016 இல் 445 ஆக இருந்த "ஸ்டார்ட்அப்"களின் எண்ணிக்கை 2022 இல்  86,713 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Published On :7 பிப்ரவரி 2024, 11:57 am IST


புதுதில்லி: 2016 இல் 445 ஆக இருந்த "ஸ்டார்ட்அப்"களின் எண்ணிக்கை 2022 இல்  86,713 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் கூறியதாவது: 2016 இல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட "ஸ்டார்ட்அப்"களின் எண்ணிக்கை 445 ஆக இருந்தது. இது 2022 இல் 86 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஹெல்த்கேர் மற்றும் லைஃப் சயின்ஸில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களைத் தொடர்ந்து ஐடி துறையில் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக "ஸ்டார்ட்அப்" இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் 80 சதவீத மாவட்டங்களில் குறைந்தது ஒரு அங்கீகரிக்கப்பட்ட "ஸ்டார்ட்அப்" நிறுவனம் உள்ளது என்று சோம் பிரகாஷ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.