அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நடுத்தர வர்க்க மக்களை பட்ஜெட் வலிமையாக்கியுள்ளது: பிரதமர் மோடி

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்க மக்களை பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 6:28 am

DIN

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்க மக்களை பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த பட்ஜெட், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளைக் காட்டிலும் மக்களுக்கு அதிகம் திருப்தியளிப்பதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மும்பையில் வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துப் பிரதமர் பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான ஆட்சியில் வருமானத்துக்கு 20 சதவிகிதம் வரையில் வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் பூஜ்ஜியம் ஆகும். சம்பளம் பெறும் வகுப்பினராக இருந்தாலும் சரி அல்லது நடுத்தர வர்க்க மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவருக்கும் இந்த பட்ஜெட் மகிழ்ச்சியளித்துள்ளது. முன்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயில்கள் ரயில் நிறுத்தங்களில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதங்கள் எழுதினர். ஆனால், தற்போது அவர்கள் வந்தே பாரத் ரயில் சேவையக் கேட்டு கடிதம் எழுதுகின்றனர் என்றார்.

இந்த வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் மற்றும் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.