மும்பை: வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த பிரதமர்!
மும்பை - சோலாபூர் மற்றும் மும்பை - ஷீரடி இடையே இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 10) தொடங்கி வைத்தார்.


மும்பை - சோலாபூர் மற்றும் மும்பை - ஷீரடி இடையே இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 10) தொடங்கி வைத்தார்.
தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி முனையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மும்பை-சோலாபூர் இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். பின்னர், மும்பை - ஷீரடி இடையேயான இரண்டாவது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்.
மும்பை-சோலாபூர் இடையே வந்தே பாரத் ரயில் 455 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த 455 கிலோமீட்டர் தூரத்தினை 6 மணிநேரம் 30 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடைகிறது. தற்போது உள்ள நேரத்தினைக் காட்டிலும் இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவை 1 மணி நேரம் முன்னதாகவே சோலாபூரை சென்றடைகிறது. அதேபோல மற்றொரு வழித்தடமான மும்பை - ஷீரடி இடையேயான 343 கிலோ மீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 25 நிமிடத்தில் சென்றடைகிறது.
மும்பை - சோலாபூர் இடையிலான ஒரு வழிப் பயணத்துக்கு பயணச்சீட்டுக் கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிக்யூட்டிவ் வகுப்புக்கான கட்டணம் ரூ.2015 ஆக உள்ளது. மும்பை - ஷீரடி இடையே ஒரு வழிப் பயணத்துக்கு பயணச்சீட்டுக் கட்டணம் ரூ.840 ஆகவும், எக்ஸிக்யூட்டிவ் வகுப்புக் கட்டணம் ரூ.1670 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உணவு சேவைகளைப் பெற தனி கட்டணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...