

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
சூரத் மாவட்டத்தில் இன்று அதிகாலை 12.52 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும், 5.2 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.