மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராம கண்காட்சியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.
கொல்கத்தாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஜாய்நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பாந்த்ரா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
முதற்கட்ட விசாரணையில், பலூன் விற்பனையாளர் பலூன்களை பம்ப் செய்யபோது எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
சாஹின் மொல்லா (13), குதுபுதீன் மிஸ்திரி (35), அபிர் காசி (8) மற்றும் பலூன் விற்பனையாளர் முச்சிராம் மொண்டல் (35) ஆகியோர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் பருப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 3) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களால் பூந்தமல்லியில் நகராட்சிக்கு வருவாய் இழப்பு

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கொளத்தூா் வாக்குகள் சரிபாா்ப்பு பணி: திமுக புறக்கணிப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



