தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டது!

தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டது!

தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்தராபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது பீபிநகர் என்ற பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பயணிகள் அனைவரும் காயமின்றி நலமுடன் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோதாவரி ரயில் தடம் புரண்டதால், அவ்வழியாக செல்லக் கூடிய ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் புவனகிரி, பீபிநகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com