ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குனோ தேசிய பூங்காவில் 12 சிவிங்கிப் புலிகள் விடுவிப்பு

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டன.

News image
Updated On :18 பிப்ரவரி 2023, 11:54 am

DIN

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டன.

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்படி, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள்) ஏற்கெனவே இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி, தனது பிறந்த தினத்தில் பிரதமா் மோடி இந்த 8 சிவிங்கிப் புலிகளையும் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டாா். இப்போது 8 சிவிங்கிப் புலிகளும் நல்ல உடல்நிலையுடன் காணப்படுகின்றன.

அடுத்தகட்டமாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து 7 ஆண் சிவிங்கிப் புலிகளும் 5 பெண் சிவிங்கிப் புலிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய விமானப் படையின் சி-17 விமானம் வியாழக்கிழமை அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. அதன்படி அந்நாட்டின் கெளடெங் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளுடன் சி-17 விமானம் மத்திய பிரதேசத்தின் குவாலியா் விமானப் படை தளத்துக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தது. 

அங்கிருந்து, சிவிங்கிப் புலிகள் விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டா் மூலம் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அவற்றைக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபெந்திர யாதவ் ஆகியோர் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தனர். அப்போது பேசியர் சிவ்ராஜ் சிங் சௌகான், மத்தியப் பிரதேசத்துக்கு மகாசிவராத்திரி பரிசு கிடைத்துள்ளது. 

பிரதமர் மோடியின் தொலைநோக்கிற்காக எனது மனமார்ந்த நன்றி. இதன்மூலம் குனோ தேசிய பூங்காவில் மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 20 ஆகிவிடும். முன்பு வந்த சிறுத்தைகள் இப்போது நிலைமைக்கு நன்றாகத் தகவமைந்துள்ளன. சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதே பிரதமர் மோடியின் லட்சியம். சிறுத்தைகள் திட்டம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். சிறுத்தைகளை பாதுகாப்பாக கொண்டு வந்ததற்காக ஒட்டுமொத்த குழுவையும் நான் வாழ்த்த விரும்புகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.