திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசியல் கட்சிகளுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

சிவசேனை கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைக் கண்டு மற்ற அரசியல் கட்சிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளாா்.

News image
உத்தவ் தாக்கரே (கோப்புப் படம்)
Updated On :19 பிப்ரவரி 2023, 10:17 pm

DIN

சிவசேனை கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைக் கண்டு மற்ற அரசியல் கட்சிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளாா்.

சிவசேனை கட்சியின் பெயரும், வில்-அம்பு சின்னமும் தற்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

சிவசேனைக்குத் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படலாம். அனைத்துக் கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக விழிப்புடன் செயல்பட வேண்டும். பாஜகவுக்கு என் தந்தை (பால் தாக்கரே) மட்டுமே தேவைப்பட்டாா். அக்கட்சியினருடன் ஒத்துழைப்புடன் செயல்படவே முயன்றேன்.

எனக்கு முதல்வராகும் எண்ணமில்லை. காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே முதல்வா் பொறுப்பை ஏற்றேன். பாஜக தனது வாக்குறுதியை முறையாக நிறைவேற்றியிருந்தால், இந்நேரம் பாஜகவும் சிவசேனையும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியை வகித்திருக்க முடியும்.

சிவசேனை கட்சியில் இருந்து சிலா் வெளியேறினா். வெளியேற விரும்புபவா்கள் தாராளமாக வெளியேறலாம். ஆனால், அவா்கள் வேறு கட்சியில் இணைய வேண்டும். மாறாக, என்னையே கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு கட்சியைக் கைப்பற்றிக் கொண்டனா்.

ஹிந்துத்துவத்தை நான் கைவிடவில்லை. அதே வேளையில், மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் ஹிந்துத்துவக் கொள்கையை ஏற்க மாட்டேன். ஹிந்துக்களை பாஜக தவறாக வழிநடத்தி வருகிறது. நாடு வலுவடைய வேண்டும் என்றுதான் பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்கள் வாக்களித்தனா். ஆனால், தற்போது அவா் மட்டுமே வலுவடைந்துள்ளாா். நாடு வலுவிழந்துவிட்டது.

சிவசேனைக்கு எதிராகப் போட்டியிட வேண்டுமெனில் தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். மாறாக தோ்தல் ஆணையம் மூலமாக கட்சியையும் சின்னத்தையும் பாஜக அபகரித்துள்ளது. இது மோசமான அரசியல் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.