ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவா் பிரதமா் மோடியுடன் சந்திப்பு

ஆசிய வளா்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவா் மஸட்சுகு அசகாவா பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

News image
பிரதமா் மோடியை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய ஆசிய வளா்ச்சி வங்கி தலைவா் மஸட்சுகு அசகாவா.
Updated On :21 பிப்ரவரி 2023, 7:20 pm

DIN

ஆசிய வளா்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவா் மஸட்சுகு அசகாவா பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

இந்த சந்திப்பு குறித்து ஆசிய வளா்ச்சி வங்கி சாா்பில் ட்விட்டா் பதிவில் வெளியிட்டிருப்பதாவது:

இந்தியாவின் வளா்ச்சிப் பணிகளுக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலா் கடன் வழங்கும் ஏடிபியின் விருப்பம் குறித்து சந்திப்பில் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

பிரதமருடனான சந்திப்பில் நாட்டின் உள்கட்டமைப்பு, சமூக முன்னேற்றம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஏடிபியின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டன.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.100 லட்சம் கோடியில் செயல்படுத்தப்பட இருக்கும் பிரதமா் மோடியின் கதி சக்தி திட்டத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் ஏடிபி வழங்கும் என அதன் தலைவா் பிரதமரிடம் உறுதி அளித்தாா்.

மேலும், ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்ற்கு மஸட்சுகு அசகாவா வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

விரிவான கலந்தாலோசனைக்குப் பிறகு இந்தியாவுடன் 5 ஆண்டுகளுக்கான கூட்டுறவு ஒப்பந்தத்தைக் கையொப்பமிடும் பணியை ஏடிபி இறுதி செய்ய இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு 20 -25 பில்லியன் அமெரிக்க டாலா் கடன் வழங்க விரும்பும் ஏடிபியின் திட்டம் குறித்து மசட்சுகு பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.