சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 6:30 pm

DIN

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘இந்தக் கலந்துரையாடலின்போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு, இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது, ராணுவ தளவாட கூட்டு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்பு துறை சாா்ந்த உற்பத்தி நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து, கூட்டு உற்பத்திக்கான சாத்தியமுள்ள துறைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் கூட்டுறவு மூலமாக இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் பிரிட்டன் நிறுவனங்களும் பங்குபெற வேண்டும் என்ற ஆலோசனையும் இந்தியா சாா்பில் தெரிவிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசித்ததோடு, பிராந்திய மற்றும் இந்திய-பசிபிக் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.