சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘தன்னைக் கொல்ல முதல்வரின் மகன் சதி’: சிவசேனை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

தன்னைக் கொல்ல மகாராஷ்டிர மாநில முதல்வரின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே கூலிப்படையை ஏவி விட்டுள்ளதாக சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்பியுமான சஞ்சய் ரெளத் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :22 பிப்ரவரி 2023, 10:56 am

DIN

தன்னைக் கொல்ல மகாராஷ்டிர மாநில முதல்வரின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே கூலிப்படையை ஏவி விட்டுள்ளதாக சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்பியுமான சஞ்சய் ரெளத் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை கட்சியின் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினரை சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ பிரிவினராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். 

இந்நிலையில் சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். 

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர், மும்பை, தாணே காவல்துறை ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே தன்னைக் கொல்ல தாணேவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ராஜா தாகூரிடம் பேரம் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

சஞ்சய் ரெளத்தின் இந்த குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய அவர், “ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்தபிறகு தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு விட்டது. எனினும் அரசியல்ரீதியிலான இந்த நடவடிக்கைக்கு தான் புகார் எதுவும் எழுப்பவில்லை. மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய சூழலில் இதனை பொது கவனத்திற்கு கொண்டு வரவேண்டி உள்ளது” எனக் குறிப்பிட்டார். 

சஞ்சய் ரெளத்தின் இந்த புகார் குறித்து பதிலளித்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். அவரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யும்” எனத் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.