மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘பாஜகவிற்கு உதவும் மம்தா’: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாஜகவிற்கு உதவுவதற்காக திரிணமூல் கட்சி செயல்பட்டு வருவதாக மேகாலயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

News image
பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி
Updated On :22 பிப்ரவரி 2023, 10:09 am

DIN

பாஜகவிற்கு உதவுவதற்காக திரிணமூல் கட்சி செயல்பட்டு வருவதாக மேகாலயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

மேகாலயாவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் மேகாலய மாநிலம் சில்லாங்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், “உங்களுக்கு திரிணமூல் கட்சியின் வரலாறு தெரியும். மேற்கு வங்கம் வன்முறை நிறைந்ததாக மாறியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோவா சட்டப்பேரவையில் போட்டியிட்டது. பாஜகவிற்கு உதவுவதற்காக பெரும்தொகையை அக்கட்சி செலவிட்டது. திரிணமூல் கட்சியின் எண்ணமே மேகாலயத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாட்டின் கலாச்சாரத்தை சிதைத்து வருகின்றன. ஆனால் நாங்கள் நம்முடைய வரலாற்றையும், அடையாளத்தையும், பண்பாடு கலாச்சாரத்தையும் அழிந்துபோக விட மாட்டோம். நமது நாடு வன்முறையான நாடு கிடையாது. 

தாங்கள் நினைப்பதை அடுத்தவர் மீது திணிப்பதை ஆளும் அரசு செய்து வருகிறது. அதற்கெதிராக அன்பு, மரியாதை, வன்முறையற்ற சூழலுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக அரசு அபகரித்து வருகிறது. நாடாளுமன்றம், ஊடகம், அரசு நிர்வாகம், தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் என அனைத்தின் மீதும் ஆர்எஸ்எஸ் தாக்குதல் நடத்துகிறது” எனக் குறிப்பிட்டார். 

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.