ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தவறான விமான நிலையத்துக்கு வந்துவிட்டு, பிரதமர் மோடியை குற்றம் சொன்னது ஏன்?

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு தவறுதலாக வந்துவிட்ட பயணி ஒருவர், அதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 மாநாடு என பலவற்றையும் குற்றம்சாட்டி வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 7:10 am

DIN


மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு தவறுதலாக வந்துவிட்ட பயணி ஒருவர், அதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 மாநாடு என பலவற்றையும் குற்றம்சாட்டி வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.

ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமானத்தில் மும்பையிலிருந்து பெங்களூரு செல்ல வேண்டிய உஜ்ஜவல் திரிவேதி என்பவர், உள்ளூர் விமான நிலையத்துக்குப் பதிலாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துவிடுகிறார்.

விமான நிலையத்துக்குள் நுழைந்த பிறகுதான், அவர் முன்பதிவு செய்த விமானம் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து புறப்படுவது அவருக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், தான் முன்பதிவு செய்த விமான டிக்கெட்டில் சர்வதேச விமான நிலையம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் விடியோவில் காண்பித்து, விமான டிக்கெட்டில் சர்வதேச விமான நிலையம் என்று குறுப்பிட்டிருந்தால் தான் எவ்வாறு உள்ளூர் விமான நிலையத்துக்குச் செல்வேன் என்றும், நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார், ஜி-20 மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சாதாரண மனிதனுக்கு இத்தனை பிரச்னைகள் உள்ளன என்று விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Story image

காலை நேரத்தில் விமானத்தைப் பிடிக்க ஒருவர் எப்படி வருவார் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் விமான நிலையத்துக்கு வந்ததம் அது தவறான விமான நிலையம் என்று தெரிந்தால் எப்படி இருக்கும். சரியான விமான நிலையத்தின் பெயரை குறிப்பிட்டிருக்கலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், சில செயலிகள் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இவ்வாறு தவறான விமான நிலையத்தின் பெயர்தான் பதிவு செய்யப்பட்டு வரும் என்றும் அவர் அந்த டிக்கெட் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு ஆகாசா ஏர் நிறுவனம் சார்பில் மன்னிப்புக் கோரியிருக்கிறது. இது குறித்து மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அவரது விடியோ பரவிய நேரத்துக்குள் பலரும், நீங்கள் தவறான விமான நிலையம் சென்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டுவது ஏன் என்று கருத்துகளை பதிவிட்டு வந்தனர். பிறகு மற்றொரு விடியோவையும் உஜ்ஜவால் வெளியிட்டிருந்தார். அதில், செயலி மற்றும் விமான நிறுவனம் இரண்டுமே தங்களது தவறை ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.

மேலும், ஏன் அந்த விடியோவில் பிரதமர் நரேந்திர மோடியையும் ஜி20 மாநாட்டையும் குற்றம்சாட்டினீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதாவது, ஒரு பிரச்னையை எப்படி எழுப்ப வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் நம் நாட்டைப் பற்றி ஒரு தகவலை எடுத்துச் சொல்ல விரும்பும்போது, இங்கே அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அதனை தெரியப்படுத்த வேண்டும். இது நமது கடமையும் கூட என்று விளக்கமும் அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.