

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் திங்கள்கிழமை கர்நாடக மாநிலத்துக்கு வருகை தரவிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை திறந்து வைக்கவிருக்கிறார்.
இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
கர்நாடக மாநிலத்தில் நிறைவுற்ற பல நலத்திட்டப் பணிகளையும் அவர் தொடக்கி வைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷிவமோகா விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு, விமான நிலையத்துக்குள் நடந்து சென்று நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடவிருக்கிறார். பின்னர். ஷிவமோகா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் நிறைவுற்றப் பணிகளைத் தொடக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார் பிரதமர் மோடி.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
ரூ.450 கோடிச் செலவில் ஷிவமோகா விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகள் வரை கையாளும் வகையில் விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.