மகாராஷ்டிரத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 3 பெண்கள் பலி
சோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.


சோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க- பாலியல் புகார்: ஹரியாணா அமைச்சர் சந்தீப் சிங் ராஜிநாமா
உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பலியான பெண்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் பணிபுரியும் 6 முதல் 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட தகவலின்படி, தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 40 தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...