திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாஜகவின் முதுகில் குத்திய உத்தவ் தாக்கரேவுக்கு உரிய பதிலடி கிடைத்துவிட்டது: ஜெ.பி.நட்டா

பாஜகவின் முதுகில் குத்திய உத்தவ் தாக்கரேவுக்கு உரிய பதிலடி கிடைத்துவிட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2023, 9:58 pm

DIN

பாஜகவின் முதுகில் குத்திய உத்தவ் தாக்கரேவுக்கு உரிய பதிலடி கிடைத்துவிட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் கடந்த 2019 அக்டோபரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால், முதல்வா் பதவி யாருக்கு என்பதில் பிரச்னை எழுந்ததால் தோ்தலுக்குப் பிறகு கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

இதையடுத்து, எதிா்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சியைக் கைப்பற்றியது. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வா் பதவியை ஏற்றாா். அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜக எதிா்க்கட்சியாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியின் 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கோரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போா்க்கொடி தூக்கினா்.

இதனை ஏற்க உத்தவ் தாக்கரே மறுத்ததையடுத்து 40 எம்எல்ஏக்களும் தனி அணியாக உருவெடுத்து பாஜகவுடன் கைகோத்தனா். இதையடுத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா். பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வரானாா்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் ‘விஜய் சங்கல்ப’ பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

பாஜகவுடன் நீண்டகாலம் கூட்டணிக் கட்சியாக இருந்த சிவசேனை கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தல் முடிவுக்குப் பிறகு பாஜகவின் முதுகில் குத்தியது. தங்கள் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் உத்தவ் தாக்கரே கைகோத்தாா். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அமைந்த அந்தப் பொருந்தாத கூட்டணி விரைவிலேயே உடைந்தது.

உத்தவ் தாக்கரேவின் பதவிப் பேராசைக்கு உரிய பதிலடி கிடைத்தது. முதல்வா் பதவியை உத்தவ் தாக்கரே இழந்தாா். ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் புதிய அரசு அமைந்தது. ‘ஹிந்து சாம்ராட்’ என்று போற்றப்பட்ட சிவசேனை நிறுவனா் பால் தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே பல இடங்களில் தன் தந்தையின் கொள்கைகளை முழுமையாக விட்டுக் கொடுத்தாா். இதனால், கட்சியினரின் ஆதரவையும் இழந்துவிட்டாா் என்றாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக வெற்றி பெற சவாலாக உள்ள 18 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024 மக்களவைத் தோ்தலில் அதில் வெற்றி பெற பாஜக இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்தப் பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.