வெளியில் இருந்து உணவுப் பொருள்கள், தண்ணீர் கொண்டு வருவதைத் தடை செய்ய திரையரங்குகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், 'திரையரங்கில் உணவு, பானங்கள் விற்பனை செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமைக்க திரையரங்குகளுக்கு முழு உரிமை உண்டு.
மக்கள் வெளியில் இருந்து உணவு, பானங்கள் கொண்டு வருவதற்கு திரையரங்குகள் தடை விதிக்கலாம். அதேநேரத்தில் தியேட்ரில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும், குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களை அனுமதிக்கலாம்.
அதுபோல பார்வையாளர்களும் திரையரங்குகளுக்குள் உணவுகளை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை' என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்போரூா் விசிக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

வணிக / தொழில்துறை எல்பிஜி எல்பிஜி நுகா்வோா் பிஎன்ஜி இணைப்புகளைப் பெற சிஜிடி நிறுவனத்தை அணுகலாம்

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


