தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அருணாசலில் சியோம் பாலத்தை திறந்துவைத்தார் ராஜ்நாத் சிங்

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அருணாசலப் பிரதேசத்தில் கட்டப்பட்டு வந்த சியோம் பாலத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.

News image

அருணாசலில் மிக முக்கிய பாலத்தை திறந்துவைத்தார் ராஜ்நாத் சிங்

Updated On :3 ஜனவரி 2023, 9:52 am

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அருணாசலப் பிரதேசத்தில் கட்டப்பட்டு வந்த சியோம் பாலத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.

மேலும், எல்லையோர சாலைகள் நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்ட 27 திட்டங்களையும் இன்று ராஜ்நாத் சிங் துவக்கி வத்துள்ளார்.

இந்திய எல்லையோர உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் வகையில், ரூ.724 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், பெரும்பாலும் சீன எல்லையையொட்டி லடாக் - அருணாசலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Story image

விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் சிறப்பான மற்றும் எளிமையான போக்குவரத்து வசதியை உருவாக்க பிரதமர் தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது. குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளுக்கு என்று தெரிவித்துள்ளார்.

அலோங் - யின்கியோங் சாலை - 100 மீட்டர் எஃகு உலோகத்தால் வளைவுகளைக் கொண்ட இந்த பாலம், விரைவாக இந்திய படைகள் சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக அப்பர் சியாங் மாவட்டங்களுக்கு படைகளை எடுத்துச் செல்ல முடியும். 

மேலும், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், அருணாசலம், ஜம்மு - காஷ்மீர், லடாக், உத்தரகண்ட், சிக்கிம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கட்டப்பட்ட 21 மேம்பாலங்கள், மூன்று சாலைகள், மூன்று கூடுதல் கட்டமைப்புகள் போன்றவற்றையும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.