ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேற்கு வங்க ஆளுநருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த் போஸுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2023, 7:06 pm

DIN

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த் போஸுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

மத்திய ரிசா்வ் படையின் 25 முதல் 30 கமாண்டோக்கள் சுயற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பாா்கள். வெளிநாடு செல்லும் போதும் அவருக்கு இந்த பாதுகாப்பு தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

விஐபிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வழங்கி வருகிறது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள ஜகதீப் தன்கா் மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதன்பின்னா், கேரளத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சி.வி. ஆனந்த் போஸ் கடந்த நவம்பா் மாதம் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.