மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

3,700 இந்திய அணைகளுக்கு இந்த நிலை ஏற்படும்: ஐ.நா. எச்சரிக்கை

இந்தியாவில் இருக்கும் சுமார் 3,700 அணைகள், வரும் 2050ஆம் ஆண்டுகளில், வண்டல் மண் கலப்பினால் அதன் 26 சதவீத நீர்தேக்கும் திறனை இழந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு

News image

3,700 இந்திய அணைகளுக்கு இந்த நிலை ஏற்படும்: ஐ.நா. எச்சரிக்கை

Updated On :9 ஜனவரி 2023, 12:42 pm


புது தில்லி: இந்தியாவில் இருக்கும் சுமார் 3,700 அணைகள், வரும் 2050ஆம் ஆண்டுகளில், வண்டல் மண் கலப்பினால் அதன் 26 சதவீத நீர்தேக்கும் திறனை இழந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவ், மத்திய நீர் ஆணையம், 2015ஆம் ஆண்டு, நாட்டில் உள்ள 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பழைமையான மிகப்பெரிய 141 அணைகள், தனது நீர்த்தேக்க அளவில் 30 சதவீதத்தை இழந்துவிடும் என்று தெரிவித்திருந்தது.

உலகம் முழுவதும் சுமார் வண்டல் மண் காரணமாக ஏற்கனவே 50,000 மிகப்பெரிய அணைகள் தங்களது நீர்த்தேக்க அளவில் 13 - 19 சதவீதம் அளவுக்கு இழந்துவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மைய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், உலகளவில் இருக்கும் அணைகளின் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டுள்ளது.

பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நீர்மின்சாரம், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரை வழங்குவது என ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. இதன் நீர்த்தேக்க அளவு குறைவது என்பது ஒரே நேரத்தில் இவை அனைத்தையுமே பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.