தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பொற்கோயிலுக்குச் செல்கிறார் ராகுல் காந்தி!

பஞ்சாபில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலைத்  தரிசனம் செய்ய உள்ளார். 

News image
Updated On :10 ஜனவரி 2023, 6:06 am

பஞ்சாபில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலைத்  தரிசனம் செய்ய உள்ளார். 

ஹரியாணாவில் ராகுலின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமையோடு  நிறைவடைந்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சுட்டுரை பக்கத்தில், 

116வது நாள் ஒற்றுமை நடைப்பயணம் ஹரியாணாவின் அம்பாலாவில் நிறைவு செய்துள்ளது. நாளை காலை பஞ்சாபில் கால் பதிக்க உள்ளோம் என்றார். 

அமிர்தசரஸில் உள்ள புனிதமான பொற்கோயிலுக்கு நடைப்பயணம் செய்வதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. இன்று பிற்பகல் நடைப்பயணம் இருக்காது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். 

முன்னதாக இன்று காலை, அம்பாலா கண்டத்தில் உள்ள ஷாபூரிலிருந்து ராகுல் காந்தி பாத யாத்திரையை மீண்டும் தொடங்கினார்.

கடந்த வியாழனன்று அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரியாணாவின் பானிபட்டில் நுழைந்தது, பின்னர் அம்பாலா மாவட்டத்தில் முடிவதற்கு முன்பு கர்னால் மற்றும் குருஷேத்ரா மாவட்டங்கள் வழியாகவும் சென்றது.

செவ்வாய்க்கிழமை இரவு பஞ்சாபின் ஃபதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்தின் நியூ அனாஜ் மண்டியில் நிறுத்தப்பட்டு, புதன்கிழமை காலை பஞ்சாபில் மீண்டும் நடைப்பயணம் தொடங்கும். 

ஹரியாணா பயணத்தின்போது காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும், ஜம்மு-காஷ்மீரின் தலைநகரில் காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.