ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஜனவரி 14 முதல் 19 வரை.. வட இந்திய மாநிலங்களுக்கு எச்சரிக்கை

வட இந்திய மாநிலங்கள் அடுத்த உறைபனி அலையை சந்திக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

வட இந்திய மாநிலங்களுக்கு எச்சரிக்கை

Updated On :12 ஜனவரி 2023, 11:25 am

DIN


புது தில்லி: வட இந்திய மாநிலங்கள் அடுத்த உறைபனி அலையை சந்திக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல், வட இந்திய மாநிலங்களில் அடுத்த உறைபனி அலை தாக்கக் கூடும் என்று வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருவோர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜனவரி 14 - 19ஆம் தேதி குளிர்நிலை மிகவும் மோசமடையும் என்றும், 16 - 18ஆம் தேதிகளில் உறைபனி அதாவது குறைந்த வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு குறையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வரும் நவ்தீப் தாஹியா மேலும் கூறுகையில், புகைமூட்டம் இந்த குறைந்த வெப்பநிலைக்கு மிக முக்கியக் காரணியாக அமையும். இதே நிலை தொடர்ந்தால், அதிகபட்ச வெப்பநிலையும் ஒற்றை இலக்க எண்ணுக்குக் குறையும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்கு இந்த வெப்பநிலையில் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பதிவாகக் கூடும் என்றும், மிகவும் ஆச்சரியமான நாள்கள் காத்திருக்கின்றன என்றும் அவர் பதிவிட்டளள்ர்.

வரும் சில நாள்கள் மிகவும் குளிரானதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்றிலேயே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மிகவும் குளிரான மாதமாக இருக்கலாம்  - ஒரு வேளை, 21ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் குளிரான மாதமாகவும் அமையலாம் - என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.