மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அசாமில் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து: 3 பேர் பலி, 14 பேர் காயம்!

அசாமின் மோரிகான் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-37 இல் பக்தர்கள் சென்ற வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

News image
Updated On :16 ஜனவரி 2023, 11:31 am IST

அசாமின் மோரிகான் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-37 இல் பக்தர்கள் சென்ற வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

ஞாயிற்றுக்கிழமை மகர சங்கராந்தியை முன்னிட்டு லோஹித் நதியில் புனித நீராடிய 17 பக்தர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பர்சுராம் குண்டாவில் இருந்து குவஹாத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது தரம்துல் பகுதியில் பக்தர்கள் வந்த வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மோரிகான் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இறந்தவர்களில் ஒருவர் பூபால் ஆதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார், மற்றவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.