நடைப்பயணத்தில் ராகுலை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் பரபரப்பு! 

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
நடைப்பயணத்தில் ராகுலை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் பரபரப்பு! 
நடைப்பயணத்தில் ராகுலை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் பரபரப்பு! 
Updated on
1 min read

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கடும் குளிருக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயணம் இன்று மீண்டும் தொடங்கியது. 

இந்நிலையில், ஜாக்கெட் அணிந்திருந்த நபர் ஒருவர் காங்கிரஸ் தலைவரை நோக்கி விரைந்து சென்று அவரை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். 

சம்பவ இடத்திலிருந்த பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங், ராஜா வாரிங் மற்றும் காந்தியுடன் வந்த மற்ற கட்சிக்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தி, தள்ளிவிட்டனர். 

இது பாதுகாப்பு மீறல் அல்ல என்று போலீஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமையன்று காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சௌத்ரிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, நடைப்பயணம் 24 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைப்பயணம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், இன்று ஃபதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்தில் இருந்து மீண்டும் தொங்கியது. இந்த நடைப்பயணம் இன்றிரவு கேரியனில் நிறுத்தப்படுகிறது. 

செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த பயணம் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைந்து, ஜம்மு-காஷ்மீரின் தலைநகரில் ராகுல்காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com