மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்

புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ராகுல், இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

News image
இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்
Updated On :17 ஜனவரி 2023, 10:15 am

DIN


பாஜக எம்.பி. வருண் காந்தி, ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக வந்த புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ராகுல், இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷிப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் சில விஷயங்களை வருண் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அந்த கருத்துகளுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.

என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்லவே முடியாது, அவ்வாறு நான் செய்வதாக இருந்தால், அதற்கு முன் நீங்கள் என் தலையை துண்டித்துவிட வேண்டும். எனது குடும்பத்துக்கு என்று ஒரு கொள்கை உள்ளது, அதற்கென ஒரு சிந்தனை முறை உள்ளது என்றும் தெரிவித்தார்.

என்னால் நிச்சயமாக அவரை சந்திக்க முடியும், அரவணைக்க முடியும். ஆனால் ஒருவோதும் அந்த சித்தாத்தங்களோடு ஒத்துப்போக முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ராகுல்.

நடைப்பயணத்தின் போது பாதுகாப்புக் குறைபாடு நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள ராகுல், நடைப்பயணத்தில் இணைந்த அனைவரும் பாதுகாப்பை உறுதிசெய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். கட்டிப்பிடிக்க வந்தவர், என்னைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அவ்வளவுதான் என்று ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று காலை ஒற்றுமை நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியிடம் வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், திடீரென அவரை கட்டிப்பிடிக்க முயன்றதால், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை விலக்கி வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.