இரட்டை முகம் கொண்ட பாஜக சொல்வதொன்று, செய்வதொன்று: மம்தா

இரட்டை முகம் கொண்ட பாஜக தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதியும், தேர்தலுக்குப் பின் செய்வது ஒன்றாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பாஜகவைத் தாக்கியுள்ளார். 
இரட்டை முகம் கொண்ட பாஜக சொல்வதொன்று, செய்வதொன்று: மம்தா
Updated on
1 min read

இரட்டை முகம் கொண்ட பாஜக தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதியும், தேர்தலுக்குப் பின் செய்வது ஒன்றாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பாஜகவைத் தாக்கியுள்ளார். 

தேர்தல் நடைபெறவுள்ள மேகாலயாவில் வடக்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 

அப்போது அவர் உரையில், வடகிழக்கு மாநிலத்தில் சிறந்த ஆட்சியை வழங்கக்கூடிய ஒரே கட்சி தனது திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே என்று வலியுறுத்தினார். 

பாஜக இரட்டை முகமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் எதையாவது சொல்லிவிட்டு, அதன்பிறகு வேறு எதையாவது செய்கிறது. 

காவி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய பாஜக அரசு பணம் தருகிறது. எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை அவர் வலியுறுத்தினார். 

மேகாலயாவில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 

இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் சிறந்த ஆட்சியை வழங்கக்கூடிய ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ். 

மேகாலயாவில் மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை நாங்கள் தர விரும்புகிறோம் என பானர்ஜி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com