மும்பை: கரோனா பேரிடர் தொடங்கிய பிறகு அதாவது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின், மும்பையில் செவ்வாயன்று ஒரு கரோனா பாதிப்பும் பதிவாகவில்லை.
அதுமட்டுமல்லாமல், பிரிஹன்மும்பை நகராட்சிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் கரோனா பாதித்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி மும்பையில் முதல் முறையாக இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு மிகச் சரியாக 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 14 நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக மும்பையில் செவ்வாயன்று புதிதாக கரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.
இதற்கிடையே, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி ஒரே நாளில் 20,971 பேருக்கு கரோனா உறுதியானது. அதன்பிறகு, நவம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் கரோனா தொற்று குறையத் தொடங்கியது. மெல்ல ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், ஜனவரி 18ஆம் தேதி ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


