தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பத்ரிநாத் கோயில் நடைஏப். 27-இல் திறப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ஏப்ரல் 27-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஜனவரி 2023, 7:38 pm

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ஏப்ரல் 27-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

விஷ்ணு பகவானுக்குரிய இக்கோயில், வழக்கமாக குளிா்காலத்தையொட்டி சாத்தப்பட்டு, பின்னா் கோடை காலத்தின் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும். அதன்படி, கடந்த ஆண்டு நவம்பா் 19-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது.

கோயில் நடையை மீண்டும் திறப்பதற்கான தேதி மற்றும் நேரம் குறிக்கும் நிகழ்ச்சி, நரேந்திர நகரில் உள்ள தேரி அரச குடும்ப மாளிகையில் வசந்த பஞ்சமி நாளில் நடைபெறுவது பாரம்பரியமாகும்.

இந்நிலையில், வசந்த பஞ்சமி நாளான வியாழக்கிழமை கோயில் நடை திறப்புக்கான தேதி, நேரம் முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 7.10 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் என்று பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனா். இதையொட்டி, கோயிலுக்கு எண்ணெய் குடம் எடுத்துச் செல்லும் யாத்திரை, ஏப்ரல் 12-இல் தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.