ஏப்ரல் 27ல் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு! 

பத்ரிநாத் கோயிலின் நடை ஏப்ரல் 27-ம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் கமிட்டி தெரிவித்துள்ளது. 
ஏப்ரல் 27ல் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு! 
Published on
Updated on
1 min read

பத்ரிநாத் கோயிலின் நடை ஏப்ரல் 27-ம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் கமிட்டி தெரிவித்துள்ளது. 

பத்ரிநாத் கோயிலின் நடை திறப்பதற்கான தேதிகள் "பஞ்சாங் கத்னா" என்று அழைக்கப்படும் நாள்காட்டியைப் படித்து முடிவு செய்யப்பட்டதாகவும், காடு கடா கலச யாத்திரை ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கும் என்றும் பத்ரி-கேதார் குழு தெரிவித்துள்ளது. 

பராம்பரிய வழக்கத்தின்படி மரபுகளுடன் பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யமுனோத்ரி, கங்கோத்ரி மற்றும் கேதார்நாத் ஆகியவற்றை உள்ளடக்கிய 'சார் தாம்' எனக் குறிப்பிடப்படும் நான்கு புராதன யாத்திரை தலங்களில் பத்ரிநாத் ஆலயமும் ஒன்றாகும். இது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் நகரில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்கள் (ஏப்ரல் இறுதியில் மற்றும் நவம்பர் தொடக்கத்தில்) திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com